என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81 லட்சத்தில் சமுதாய கூடம்
- மூன்றில் ஒரு பங்கு தொகை ரூ.27 லட்சத்தை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்
- அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் எர்த்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 81 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக மூன்றில் ஒரு பங்கு தொைகயை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனிடம் ரூ.27 லட்சத்திற்கான காசோலையை எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒன்றியக்குழு துணை தலைவருமான கே.கே.வி. அருண்முரளி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் வழங்கினர்.
Next Story