என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியின் தலையில் இருந்த 3 கிலோ கட்டி அகற்றம்
- மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்
- நாராயணி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
வேலூர்:
ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் சக்தி அம்மா ஆசி யோடு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தலையில் இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
பிளாஸ்டிக் அறுவைசி கிச்சை நிபுணர் ஸ்ரீனிவாஸ், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் திவ்யா, வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். அவர்களை, மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் என்.பாலாஜி பாராட் டினார்.
Next Story






