என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
75-வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி
- தபால் துறை சார்பில் நடந்தது
- 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் தபால் துறை சார்பில் இந்திய திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு தபால் ஊழியர்கள் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தபால் துறை திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.குடியாத்தம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பிரேமாவதி, போஸ்ட் மாஸ்டர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
குடியாத்தம் காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு அருகில் இருந்து புறப்பட்ட பேரணி தலைமை அஞ்சல் அலுவலகம் வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் நிறைவு பெற்றது.
மூத்த வழக்கறிஞர் எஸ்.சம்பத்குமார் பேரணியை நிறைவு செய்தார்.
இந்தப் பேரணியில் வணிக மேலாளர் ராஜேஷ் தலைமை தபால் ஊழியர் சிவகுமார், உதவி அலுவலர் எழில்மாறன், மெயில் ஓவர்சீஸ் சீனிவாசன் உள்பட தலைமை அஞ்சல் ஊழியர்கள், துணை தபால் ஊழியர்கள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்