search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வசூர் ராஜா கூட்டாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்
    X

    வசூர் ராஜா கூட்டாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்

    • வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி
    • வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

    வேலூர்:

    வேலூர் செதுவாலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சொந்தமாக மினி வேனில் தனியார் நிறுவனத்தில் பால் சப்ளை செய்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு இவர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாலை சப்ளை செய்துவிட்டு இலவம்பாடி அருகே உள்ள வடக்கு மேடு மண் ரோட்டில் இரவு சென்று கொண்டிருந்தார்‌.

    அப்போது 3 பேர் அவரை மடக்கி கத்தியால் வெட்டி 2 செல்போன் மற்றும் ரூ.450 பணத்தை பறிமுதல் செய்தனர்‌.

    மேலும் அவர் ஓட்டி வந்த வேனையும் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளான வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த காதர் என்கிற அப்துல் காதர் (32), தங்கராஜ், குட்ட சுரேஷ் (39) ஆகியோரை கைது செய்தனர். இதில் தங்கராஜ் இறந்துவிட்டார்.

    இந்த வழக்கு வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு வக்கீல் பார்த்திபன் வாதாடினார்.

    இந்த வழக்கில் மாவட்ட அமர்வு நீதிபதி வசந்த லீலா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த காதர் என்கிற அப்துல் காதர் மற்றும் குட்ட சுரேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

    Next Story
    ×