என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் 650 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்த காட்சி.

    வேலூரில் 650 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்

    • குற்றங்களை தடுக்க நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கால்வாயில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மாநகராட்சி ஊழியர்களும் கால்வாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை இதே போல் ஆய்வு நடைபெறும். பொதுமக்கள் யாரும் கால்வாய்களில் குப்பை கொட்ட கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    வேலூர் மாநகராட்சியில் குற்றங்களை தடுக்கும் வகையில் மேலும் 650 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குறிப்பாக பாலாற்றில் பல்வேறு மறைமுக குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒரு குற்ற சம்பவம் நடந்துள்ளது இதனால் இப்பகுதியில் 15 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.

    மாநகராட்சியில் வாகனங்கள் மீது சிமெண்டு சாலை மற்றும் தாசாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சாலையை தோண்டி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களை அப்புறப்படுத்தாமல் ரோடு போட்ட காண்ட்ராக்டர்களுக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு சாலை அமைக்கும் பகுதியில் ஒரு நாள் முன்னதாக அந்த தெருவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும். வேலூர் மாநகராட்சி பகுதியில் 2 காரணங்களுக்காக சில இடங்களில் சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.

    வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் இரண்டு மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்படும். கடந்த ஆண்டு அதிக அளவில் நீர்வரத்து இருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    சேம்பாக்கம் கன்சால்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற பணி நடைபெறும் என தெரிவித்தார்.

    Next Story
    ×