search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

    • பிரதமர் கவுரவ நிதி திட்டத்தில் வழங்கப்படுகிறது
    • வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

    வேலூர்:

    வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டமானது 2018 முதல் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவைக்காகவும் சரியான பயிர் ஆரோக்கியம் மற்றும் அதிக விளைச்சலை உறுதி செய்திடவும் மத்திய அரசினால் விவசாய குடும்பத்தில நிலம் உள்ள ஒருவருக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 என 3 தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் பதிவு செய்த வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 12-வது தவணைத் தொகை பெறுவதற்கு வருகிற 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் பயன்பெறும் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது.

    எனவே இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகலுடன்) தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) அவர்களிடம் சமர்ப்பித்து பிப்ரவரி 2019 க்கு முன்னரே நிலம் இருப்பதனை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும்.

    மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனே ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்து பிஎம்ஐ கிஷான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன் பெற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×