search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

    • போலீசாரின் சோதனையில் சிக்கினர்
    • விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் மராட்டிபாளையம் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தில் உள்ள கொய்யா தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற வேப்பங்குப்பம் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு உள்ள ஒரு கொய்யா தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து 6 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×