என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசாருக்கு 6 புதிய ரோந்து வாகனம்
    X

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசாருக்கு 6 புதிய ரோந்து வாகனம்

    • ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைக்க உள்ளார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 கார்கள் உள்பட 37-க்கும் அதிகமாக ரோந்து வாகனங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 6 ரோந்து பைக் போலீசாருக்கு வழங்கப்ப ட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைக்க உள்ளார்.

    புதிய வாகனங்-களில் ஜிபிஎஸ் கருவிகள் அலாரம், சைரன், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வேலூர், காட்பாடிக்கு தலா 2 வாகனங்கள் சத்துவாச்சாரி குடியாத்தம் டவுன் பகுதிக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனங்கள் வேலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

    எங்காவது அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ரோந்து வாகனத்தில் செல்லும் போலீசாரை அனுப்பி உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×