என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூரில் இந்து முன்னணி சார்பில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
வேலூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வேலூர் ரங்கா புரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆதிமோகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு விழா குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க 22 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த வேண்டும். சிலை வைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி உள்ளதால் பலர் சிரமத்தில் உள்ளனர். எனவே ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டும்.
508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
வேலூர் பெருங்கோட்டத்தில் 23 இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 1008 இடங்களில் சிலை வைக்கப்பட உள்ளது.வேலூர் மாவட்டத்தில் மட்டும் 508 சிலைகள் அமைக்கப்படுகிறது.
வேலூரில் செப்டம்பர் 2- தேதி சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலக ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்குகிறது.
மாநில செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் காககிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், கமிஷனரி ரோடு, கோட்டை சுற்றுசாலை வழியாக செல்கிறது. அதேபோல கொணவட்டத்திலும் இருந்து ஊர்வலம் செல்கிறது. சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விழாவில் ஏன்? அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துகளை மையமாகக் கொண்டு ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்வலத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்