என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கருப்பு ஆயிலை திருடி குடோனில் பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது
வேலுார்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் சென்ன சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில், என்ஜின்க ளுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை திருடி பதுக்கி வைத்து, கள்ள மார்க்கெட்டில் விற்கப்படு வதாக வேலுார் மண்டல உணவுப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி நந்தகு மாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வனிதா, சப் -இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3 டேங்கர் லாரிகளில் இருந்து கருப்பு ஆயில் இறக்கப்பட்டு, குடோனுக்கு எடுத்துச்செல்வது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில், அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர்கள் 3 பேரும் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (36) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கப்பள்ளி ராஜலிங்கம் (42) என்பது தெரியவந்தது.
மேலும், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரியில் டிரைவராக வேலை செய்துவந்த விஜயகுமார் மற்றும் கிளீனர் ராஜ லிங்கம் ஆகியோர், சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் தனியார் கம்பெனிகளுக்கு ஆயில் கொண்டுசெல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சென்னசமுத்திரத்தில் உள்ள சுடலைமணிக்கு சொந்தமான குடோ னில், தனியார் கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆயிலில் இருந்து அவ்வப்போது 100, 200 லிட்டர் வீதம் திருடி பதுக்கி வைத்து, கள்ளத்தனமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் 3 பேரையும் கைதுசெய்து, வேலூர் ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றப்பட்டிருந்த 37 ஆயிரத்து 500 லிட்டர் கருப்பு ஆயிலையும் பறிமுதல் செய்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்படை க்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
