என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டில் 28 குழந்தைகள் பிறந்தன
    X

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளை படத்தில் காணலாம்.

    புத்தாண்டில் 28 குழந்தைகள் பிறந்தன

    • வேலூர், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் செய்யப்பட்டது
    • தாய்மார்களுக்கு டாக்டர்கள் வாழ்த்து

    வேலூர்:

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகள் பிறக்கின்றன.

    2023 ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது.

    புத்தாண்டு பிறப்பு முதல் நாளான நேற்று மாலை 5 மணி வரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன.

    குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு டாக்டர்கள் நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தினமும் 3-க்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கு பிரசவம் நடக்கிறது. ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 12. 1 மணி முதல் மாலை 6 மணி வரை 5 ஆண் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தன. குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால் பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×