என் மலர்
உள்ளூர் செய்திகள்

நறுவீ மருத்துவமனையில் 2 நாள் கருத்தரங்கு
- நுரையீரலில் கட்டி, ரத்தக் கட்டிகளை அகற்ற எண்டோஸ்கோபி சிகிச்சை
- 50-க்கும் மேற்பட்ட நுரையீரல் சிகிச்சை துறை டாக்டர்கள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி கார ணமாக நுரையீரலில் ஏற் படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச் சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள் நேற்று கருத்தரங்கம் தொடங்கியது.
சிகிச்சை நுரையீரல் பிரிவு தலைமை டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் வரவேற் றார். மருத்துவமனை மருத் துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத் துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் முன் னிலை வகித்தனர்.
கருத்த ரங்கின் நோக்கம் குறித்து , செயல் இயக்குனர் பால் ஹென்றி விளக்கினார். " தொடர்ந்து, நறுவீ மருத் துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் , கருத்தரங்கினை தொடங்கி மலரை வெளி யிட்டு பேசியதாவது:-
நறுவீ மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன், பல நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையாக உள்ளது . மருத் துவத்துறையில் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாட்டின் ஹென்றி போர்டு மருத்துவ தொழில்நுட் பத்தை அடிப்படையாக கொண்டு, நாட்டில் ஒரே மருத்துவமனையாக நறுவீ மருத்துவமனை விளங்குகிறது.
நுரையீரல் சிகிச்சை என்பது முன்பு பொது வான காசநோய், இதய நோய் சம்பந்தப்பட்டதா கவே இருந்தது. கரோனா தொற்றுக்கு பிறகு, நுரை யீல் சிகிச்சை துறையின் அவசியம், தேவை முக்கி யமானதாக மாறியுள்ளது.
மூச்சுக்குழாயின் உட்புறத்தில் உருவாகும் அழற்சி காரணமாக, நுரையீரலில் ஏற்படும் கட்டி, ரத்த கட் டிகளை அகற்றுவதற்கு, இதுவரையிலும் அறுவை மூலமாகவே சிகிச்சை செய்யப்பட்டது .
இப்போது எண் டோஸ்கோபி முறையில் அறுவைசிகிச்சை இன்றி நுரையீரல் கட்டியை அகற்றி சிகிச்சை அளிக்கும் முறை கடைப்பிடிக்கயப்ப டுகிறது. இதனால், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல் , புறநோயாளிகளாக சிகி ச்சை பெற்று குணமடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் செகந்தி ராபாத் யசோதா மருத்துவ மனை டாக்டர் அரிகிஷண் குனகுன்ட்லா, ஐதராபாத் மலகாப்பேட் யசோதா மருத்துவமனை டாக்டர் விஸ்வேஸ்வரன், விசாகப் பட்டினம் இதய மருத்துவ மனை டாக்டர் பாலராஜூ தடிகொண்டா, பெங்களூர் நாராயணா ஹெல்த் சிட்டி டாக்டர் கேதார் ஹிப்பாரே, அகமதாபாத் ஸ்பர்ஷ் மருத் துவமனை டாக்டர் பிரதீப் தாபி, நாராயணி மருத்து வமனை டாக்டர் கிருஷ்ண பிரியா, வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி டாக் டர் பிரியா என 50-க்கும் மேற்பட்ட தேசிய அளவி லான நுரையீரல் சிகிச்சை துறை சிறப்பு டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். நறுவீ மருத்துவமனை நுரையீரல் துறை டாக்டர் ராஜகோபால் நன்றி கூறினார் .






