என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த காளை மீட்டகப்பட்ட காட்சி.
காளைகள் முட்டி 25 பேர் காயம்
- சேர்பாடி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 175 மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியது
- கிணற்றில் விழுந்த காளை 2 மணி நேரம் போராடி மீட்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த, சேர்பாடி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசின் நிலையான அனுமதி பெற்று எருது விடும் போட்டியானது நடைபெற்ற வருகின்றது. இப்போட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் விழா குழுவினர் ரவி, லட்சுமண் ஆகியோரின் தலைமையில் விழா நடைப்பெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வந்திருந்தனர்.
எருது விடும் போட்டியின் போது காளைகள் முட்டியதால் 25-க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர்.
போட்டியில் ஓடிய காளை ஒன்று வழிமாறி நிர்க்காமல் ஓடிக்கொண்டே இருந்ததால் எதிரே இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றிலிருந்து காளையை கயிறு கட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.
போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் எருது விடும் போட்டியின் போது ஒடுகத்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தின் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.