search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் பகுதியில் 150 மின் கம்பங்கள் சாய்ந்தது
    X

    குடியாத்தம் பகுதியில் 150 மின் கம்பங்கள் சாய்ந்தது

    • சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது
    • மின் விநியோகத்தை சீரமைக்க 170 ஊழியர்கள் இரவு பகலாக தீவிரம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

    அப்போது ருத்ரதாண்டவம் ஆடிய கடும் சூறைக்காற்றால் பல்லாயிரம் வாழை மரங்கள் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், பல ஏக்கரில் பயிரப்பட்டிருந்த நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் பொருத்த சேதம் அடைந்தன.

    இதேபோல் பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரவு பகல் பாராமல் அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்து பல இடங்களில் ஒரு நாள் ஆகியும் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. பலத்த மழையால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் மின்விநியோகம் தடை குறித்து குடியாத்தம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வி. எம்.வெங்கடாஜலபதி கூறுகையில்:-

    நேற்று பெய்த கனமழையால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து மின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மின்வாரிய வேலூர் மண்டல தலைமை பொறியாளர் ஞான பெட்ஷீபா, திருப்பத்தூர் கூடுதல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் மின்விநியோகத்தை சீரமைக்க திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா மின் கோட்ட பணியாளர்கள் 100 பேர் கூடுதலாக குடியாத்தம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 70 பேர் என 170 பேர் மின்விநோக்கத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இன்று மாலைக்குள் பெரும்பாலான இடங்களுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின் சப்ளை கிடைக்கும் என தெரிவித்தார்.

    நேற்று அதிகாலை முதலே கொட்டும் மழையை பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் மின் ஊழியர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைத்து வருகின்றனர் என்றார்.

    Next Story
    ×