search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தில் மாடுகள் முட்டி 13 பேர் காயம்
    X

    குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தில் மாடுகள் முட்டி 13 பேர் காயம்

    • காளை விடும் விழா நடந்தது
    • 300 காளைகள் பங்கேற்றன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 49-ம் ஆண்டு காளை விடும் விழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காளைவிடும் விழா விழாவில் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.

    விழாவில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    வெற்றி பெற்ற 72 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், எர்த்தாங்கல் ஊராட்சி பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×