என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் வெட்டப்பட்டு இருக்கும் மரங்கள்.
100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி கடத்தல்?
- பொதுமக்கள் குற்றச்சாட்டு
- சாலை விரிவாக்கம் பணி நடக்கிறது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றன.
வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் புளிய மரங்கள் உள்ளன.
பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சி யாகவும் காற்றோட்டம் நிறைந்ததா கவும் காட்சியளிக்கின்றன புளிய மரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.
தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.
ஆனால் கூடுதலாக மரங்களை வெட்டி வருவ தாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படு வதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலை தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து ஒடுகத்தூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரங்கள், புங்க மரங்கள் என 5-க்கும் மேற்ப்பட்ட மரங்களை எவ்வித அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.
அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் மேலும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட வே்டாம்.
பள்ளிகளில் வளர்க்கப்படும் மரங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற மரங்களாக கருதி அவற்றை அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






