என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோட்டை அகழியில் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வருவதை தடுக்க 10 ராட்சத நீர்மூழ்கி மோட்டார் தயார்
    X

    வேலூர் கோட்டை சுற்றுசாலை வழியாக அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்ற குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வேலூர் கோட்டை அகழியில் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வருவதை தடுக்க 10 ராட்சத நீர்மூழ்கி மோட்டார் தயார்

    • குழாய் பதிக்கும் பணி தீவிரம்
    • மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அருகே உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரை கோட்டை அகழியில் தேக்கி வைத்து உபரி நீரை நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்.

    இதற்காக, கோட்டையின் வடக்கு பகுதியில் உபரி நீர் வெளியேறும் வகையில் பெரிய கால்வாய் கட்டி யுள்ளனர். தற்போதிருக்கும் சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தில் இருக்கும் இந்த கால்வாய் காலப்போக்கில் தூர்ந்துபோ னதால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் கோட்டை அகழி நிரம்பியது. உபரி நீர் வெளியேறும் கால்வாய் தூர்ந்து போனதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 10 நாட்களுக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலை இந்தாண்டு மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அகழியில் தேங்கும் நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் ராட்சத நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ள னர். இந்த மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கோட்டையின் தென்மேற்கு பகுதியில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாநகராட்சி நுண்ணுரம் தயாரிக்கும் கிடங்குக்கு அருகே இருக்கும் நிக்கல்சன் கால்வாயுடன் சேர்க்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், கூறும்போது:-

    ''இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது மாநகராட்சி பொறுப்பாக உள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்வு இந்தாண்டும் தொடராமல் இருக்க ரூ.1.90 லட்சம் மதிப்பில் 10 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ளோம். இந்த மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1.20 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். 10 மணி நேரம் தொடர்ந்து மோட்டாரை இயக்கினால் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். மின் மோட்டாரை இயக்க சுமார் 10 கி.வாட் மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டமைப்பை நிறுவ தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும். மின்சாரம் தடை ஏற்பட்டால் 15 கி.வாட் திறன்கொண்ட ஜென ரேட்டரை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். தேவை இருந்தால் கூடுதல் மோட்டார் வாங்கவும் தயார் நிலையில் இருக்கிறோம்'' என்றார்.

    வேலூர் கோட்டை அமைப்பில் ஜல கண்டேஸ்வரர் கோவில் மட்டும் தாழ்வானப் பகுதியில் அமைந்துள்ளது. கோட்டை மற்றும் கோவில் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் அகழியில் கலக்கும் வகையில் உள்ளது. தற்போதைக்கு, கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் இருந்து 2 அடிக்கு கீழே அகழியில் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கோவிலுக்குள் அகழியின் தண்ணீர் உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×