search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலையில் காய்கறி வியாபாரி பலி
    X

    ஆனைமலையில் காய்கறி வியாபாரி பலி

    • அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 67). காய்கறி வியாபாரி.

    சம்பவத்தன்று அவர் தனது மருமகளுடன் பெரியபொது பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு மரத்தில் இருந்த பலாபழத்தை பறித்தனர். பின்னர் பரமசிவம் மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்தார்.

    அப்போது பரமசிவம் நின்றிருந்த மரக்கிளை திடீரென முறிந்தது. அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×