search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு
    X

    மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய போது எடுத்தபடம்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

    • எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடத்தப்பட்டது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாக தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள இந்தியா பிஸ்டன் லிமிடெட் நிறுவனம் கலந்து கொண்டு, வளாக தேர்வை நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்விக்குழும தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார்.

    இந்தியா பிஸ்டன் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை தலைவர்கள் கோகுல், முகேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×