என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா
    X

    குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா

    • மேள தாளங்கள் முழங்க சிவசுப்பிர மணியசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    தருமபுரி,

    விழாவையொட்டி கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவ சுப்பிரமணிய சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சிவசுப்பிர மணியசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×