என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் நாளை நடக்கிறது: கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி
    X

    தருமபுரியில் நாளை நடக்கிறது: கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி

    • 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
    • திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வர மகாலட்சுமிக்கு நாளை (25-ந்தேதி) வெள்ளி க்கிழமையன்று வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

    இதற்காக நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டு புண்யா ஹவாசனம் நடை பெறுகிறது. இதை த்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அம்மனுக்கு 8 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதனையடுத்து 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.

    இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×