search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

    • விவசாயி தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
    • பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது60). விவசாயி. இவர் தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

    இந்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரான முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

    இதனையடுத்து ராஜகோபால் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக சாமிநாதன் கேட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசாருக்கு ராஜகோபால் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாத னிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×