search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி  ராதாகிருஷ்ணன் கோவிலில் உறியடி திருவிழா
    X

    மாரண்டஅள்ளி ராதாகிருஷ்ணன் கோவிலில் உறியடி திருவிழா

    • கோ பூஜை, கணபதி பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உரியடி திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராதா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 6-ம் தேதி காலை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு அபிஷே கம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது.இதைத் தொடர்ந்து பக்தர்கள் தட்டு வரிசை ஊர்வலம் மற்றும் கருட சேவை, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு மாலை உறியடி திரு விழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் உரியடி திருவிழாவில் கலந்து கொண்டு உறிய டித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் ராதாகிருஷ்ணன் முக்கிய வீதிகள் வழியாக ரத உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கள் சாமி தரிசனம் செய்த னர்.

    Next Story
    ×