என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
- எதிர்கால காலநிலை மாற்றம் குறித்தும் பசுமை குறித்தும் விரிவாக பேசினார்.
- மூலிகை தோட்டம் மற்றும் கீரை தோட்டத்தை பார்வை யிட்டார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நத்தமேடு அரசு மேல்நி லைப்பள்ளி தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமை தாங்கி எதிர்கால காலநிலை மாற்றம் குறித்தும் பசுமை குறித்தும் விரிவாக பேசினார். தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு கலந்துகொண்டு பள்ளி பார்வையிட்டு பள்ளியில் உள்ள பசுமை சார்ந்துள்ள மூலிகை தோட்டம் மற்றும் நர்சரி தோட்டம் கீரை தோட்டத்தை பார்வை யிட்டார். சுற்றுச்சூழல் மாசுபாடு , பிளஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப் பை பற்றிய விழிப்புணர்வு குறித்தும் மாணவர்களிடையே உரை யாற்றினார்.
பள்ளியின் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தமலை 2023 -24 ஆண்டுக்கான பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கினார் விழாவில் பசுமை படை மாண வர்களுக்கு பசுமை படை சீருடை வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.