search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் குடியரசு  தினவிழா
    X

    உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் குடியரசு தினவிழா

    • முன்னாள் ராணுவ சிப்பாய் அழகிரிராஜ்க்கு செயலர் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
    • ஜனாதிபதி உரையை ஆசிரியர் ரஞ்சித்குமார் தமிழாக்கம் செய்து வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. பள்ளி செயலர் ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி தலைமை உரையாற்றினார். எஸ்.கே.பி. பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் முன்னாள் ராணுவ சிப்பாய் அழகிரிராஜ்க்கு செயலர் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    முதுகலை ஆசிரியை நளினி வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை பூரணி முன்னிலை வகித்தார். ஜனாதிபதி உரையை ஆசிரியர் ரஞ்சித்குமார் தமிழாக்கம் செய்து வழங்கினார். ஆசிரியை காளியம்மாள் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. என்.சி.சி. அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவினை ஆசிரியை கல்யாணி தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×