search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் தட்டச்சு தேர்வு
    X

    கிருஷ்ணகிரியில் தட்டச்சு தேர்வு

    • மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.
    • தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    2023ம் ஆண்டிற்கான வணிகவியல் தட்டச்சுத் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. நேற்று முன்தினம் இளநிலை மாணவ, மாணவிகள் 498 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவிகள் 241 பேருக்கும் தேர்வுகள் நடந்தன.

    நேற்று இளநிலை தேர்வை 302 பேரும் முதுநிலை தேர்வை 224 பேரும், முன் இளநிலைத் தேர்வை 13 பேரும் என மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ரத்னா தேவி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×