என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
- ஜெரினா தன் மகனை குளிக்க வைக்க வெந்நீர் வைத்தார்.
- குழந்தை அஜ்மீரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஊராட்சி, முஸ்லிம் நகரை சேர்ந்தவர் ரஜாக். தொழிலாளி. இவரது மனைவி ஜெரினா. இவர்களது 2 வயது மகன் அஜ்மீர்.
நேற்று காலை ஜெரினா தன் மகனை குளிக்க வைக்க வெந்நீர் வைத்தார். பின்னர் அந்த வெந்நீரை பாத்திரத்தில் ஊற்றி குளியல் அறையில் வைத்து விட்டு சோப்பை எடுக்க வெளியே வந்தார். அந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த குழந்தை அஜ்மீர் திடீரென வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதில் அவனது உடல் முழுவதும் வெந்து போனது. அலறல் சத்தம் கேட்டு ஜெரினா வந்து பார்த்தபோது குழந்தை வெந்நீர் பாத்திரத்தில் விழுந்து துடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தை அஜ்மீரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஜ்மீர் பரிதாபமாக உயிர் இழந்தான். இதனால் அவனது குடும்பத்தினர் சோகம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






