என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி உழவர் சந்தையில் நுழைவாயில் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி
- தருமபுரி உழவர் சந்தையில் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ந்தேதி உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி 4 ரோடு அருகிலும், ஏ.ஜெட்டி அள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகள் உள்பட 5 இடங்க ளில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு செயல்ப டுகின்றன.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளதால் மேலும் காரிமங்க லத்தில் உழவர் சந்தை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. உழவர் சந்தைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு விவசாயிகள் தங்கள் விளை வித்த காய்கறி, பழங்களை கொண்டு வருகிரார்கள். காலை 6 மணிக்கு தொ டங்கும் விற்பனை மதியம் 12 மணி வரை நடக்கிறது.தருமபுரி உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர்,உதவி நிர்வாக அலுவலர்கள், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் என நிரந்தர பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி உழவர் சந்தையில் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் 40 கடை கள் செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வந்து செல்கி றார்கள்.ஒரு நாளில் சரா சரியாக 18 டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் சுமார் 40 டன் முதல் 50 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் மற்றும் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபா ரிகள் தங்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி தருமபுரி சாலையில் நிறுத்துவதாலும் போதிய இடம் இல்லாததால் உழவர் சந்தையின் நுழைவா யிலில் சிலர் அத்துமீறி இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் போக்கு வரத்து பாதிப்படைவது மட்டுமல்லாமல் காய்கறி வாங்க செல்லும் நுகர் வோர்கள் உழவர் சந்தை க்குள் உள்ளே சென்று வெளியே வருவதற்குள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் இந்த உழவர் சந்தையை ஆய்வு செய்து இரு சக்கர வாக னங்கள் நிறுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் தளம் அமைத்து கொடுக்கப் பட்டது. சிலர் உழவர் சந்தை அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து காவல்துறை யினரையும் மீறி சாலையில் கடை விரித்துள்ளதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி சாலையிலேயே நிறுத்தி வருகின்றனர்.
இதனால் பண்டிகை காலங்களில் இந்த முக்கிய சாலை பெரும் போக்கு வரத்து பாதிப்படைகிறது. இது போன்ற சமயங்களில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் செல்போன், பொருட்கள் என தங்களு டைய உடைமைகளை பறிகொடுக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்களும் நுகர்வோர்களும் கூறுகையில்;-
மாவட்ட நிர்வாகம் உடன டியாக சாலை ஓரத்தில் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் அதே போல் உழவர் சந்தையில் நுழைவாயில் இருசக்கர வா கனங்களை நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.






