என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

    • போலீசார் ஜோதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.800-யை பறிமுதல் செய்தனர்.k

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் ஜோதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனே போலீசார் அங்கு சென்றபோது சிலர் தப்பிஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் ஊத்தங்கரை நஞ்சகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது24), மணிகண்டன் (27) ஆகிய 2 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.800-யை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×