என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
- இவருக்கும், பரிமளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் இளஞ்செழியனுக்கு தெரியவந்தது.
- தனது மனைவியை கண்டித்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பெரியதள்ளப்பாடி பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது47). இவரது மனைவி பரிமளா (43). அதே பகுதியை சேர்ந்த லட்சுமி காந்தன் (42).
இவருக்கும், பரிமளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் இளஞ்செழியனுக்கு தெரியவந்தது. இதனால் தனது மனைவியை கண்டித்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று பரிமளா, நண்பர் லட்சுமி காந்தன் ஆகியோர் சேர்ந்து இளஞ்செழியனை கத்தி, அரிவாள், கட்டை ஆகியவை கொண்டு சரமாரியாக தாக்கியு ள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த இளஞ்செழியன் ஊத்தங்கரை அரசு மருத்து வனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி காந்தன், பரிமளா ஆகியோரை கைது செய்தனர்.
Next Story






