என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து லாரி டிரைவர் உட்பட 2 பேர் தற்கொலை
    X

    விஷம் குடித்து லாரி டிரைவர் உட்பட 2 பேர் தற்கொலை

    • தருமபுரி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி அருகே உள்ள சீங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் வயது (47) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி ரேவதி, மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

    மகேந்திர னுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதும், அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மது குடித்துவிட்டு மனைவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மற்றொரு வீட்டிற்கு சென்று உள்ளார். இதில் மனமுடைந்த மகேந்திரன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

    இதனை அடுத்து மகேந்திரனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி மகேந்திரன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொடுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் வயது (31). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வலிப்பு நோயை குணப்படுத்த பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாத நிலையில் நேற்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    Next Story
    ×