என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை
- திருமணம் செய்ய அவரது பெற்ேறார்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் பெண் ஏதும் கிடைக்கவில்லை.
- மனவேதனை அடைந்த சூர்ய குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அபி (வயது 23).
இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அபி தனது கணவர் சீனிவாசனிடம வீட்டிற்கு வீட்டு செலவுக்காக பணம் கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அபி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கெலமங்கலம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சூர்யகுமார் (24).
இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்ேறார்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பெண் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சூர்ய குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






