என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
- ராமசாமிக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
- மனவேதனை யடைந்த ராமசாமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோரகுறுக்கி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது40). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி ஷோபா (35). ராமசாமிக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக ராமசாமிக்கு வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிசசை பெற்று வந்தும் அவருக்கு பலன் அளிக்கவில்லை.
இதனால் மனவேதனை யடைந்த ராமசாமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ேஷாபா பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த பி.குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). டிரைவர். இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அக்கா பிரமிளா பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






