என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது
    X

    கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது

    • சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டி ருந்தனர்.
    • 50 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டு களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்யபடுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் ஆவலூர் என்ற இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டி ருந்தனர்.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், கெழக்காடு அருகே உள்ள கன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்க–ளான ராஜேந்திரன் (வயது44), முருகன் (41) ஆகிய 2 பேர் 50 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டு களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×