என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
- கம்பாலை பகுதியைச் சேர்ந்த தருமன், சரவணன் ஆகியோர் என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
- 2 பேரையும் வனத்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப் பட்டன.
தருமபுரி,
தருமபுரி மண்டல வன பாதுகாவலர் ராகுல் உத்தரவுப்படி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு மேற்பார்வையில் மாவ ட்டத்தில் உள்ள வனப்பகுதி களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமை யில் வனவர்கள் கணபதி, வடிவேல், வனக் காப்பா ளர்கள் வெங்கடேசன், மதன்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கத்திரிப்பட்டி, கம்பாலை வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கிகளுடன் வனப்பகுதியில் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கம்பாலை பகுதியைச் சேர்ந்த தருமன், சரவணன் ஆகியோர் என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப் பட்டன.
வனவிலங்குகளை வேட்டை யாட முயன்ற 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.






