என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரியில் லாரி மோதி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு
- திடீரென மாணவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் முன்பு இருந்த பம்பர் மோதியது.
- பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி எல்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கிரண் (16) என்பவர் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை மாணவர் கிரண் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டார். பள்ளிக்கு சென்ற அவர் தனது வகுப்பறையில் பேக்கை வைத்துவிட்டு தனது தம்பியிடம் மோட்டார் சைக்கிளை கொடுக்க மீண்டும் பள்ளியில் இருந்து அருகில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு புறப்பட்டார்.
மாணவர் கிரண் சிவகிரி அம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகிரியில் இருந்து கொடுமுடி நோக்கி ஒரு வேன் சென்றது. எதிர்திசையில் கொடுமுடியில் இருந்து சிவகிரியை நோக்கி 2 லாரிகள் வந்து கொண்டிருந்தது.
திடீரென மாணவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் முன்பு இருந்த பம்பர் மோதியது. இதில் நிலைதடுமாறிய மாணவர் கீழே நடுரோட்டில் விழுந்தார். அந்த நேரத்தில் கொடுமுடியில் இருந்து வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் மாணவரின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் மாணவர் கிரண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி பலியானார்.
விபத்து பற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சிவகிரி போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் சிவகிரி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்