search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெய்க்கால்பட்டி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை
    X

    கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணியினர்.

    வெய்க்கால்பட்டி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.
    • முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணி வென்றது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து வெய்க்கால்பட்டியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழிகாட்டுதலின்படிதி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

    போட்டியில் முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணியும், இரண்டாம் பரிசை வெய்க்கால்பட்டி அணியும் வென்றது. தொடர்ந்து 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியில் கலந்து கொண்ட கபடி வீரர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர். முடிவில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×