search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் மூவர்ண கொடியால் அலங்கரிக்கப்பட்ட போர் நினைவு தூண்
    X

    குன்னூரில் மூவர்ண கொடியால் அலங்கரிக்கப்பட்ட போர் நினைவு தூண்

    • நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    ஊட்டி,

    இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி அருகே போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி அந்த நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பார்த்து ரசித்து, அதனை தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    Next Story
    ×