search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான வினாடி வினா போட்டி
    X

    மாநில அளவிலான வினாடி வினா போட்டி

    • திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில்மாநில அளவிலான வினாடி வினா போட்டி
    • 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி, திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய சொல்லுங்கள் வெல்லுங்கள் என்ற வினாடி வினா போட்டி இன்று திருச்சி என். ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ராஜா கோவிந்தசாமி, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024-25 ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் கே. ஸ்ரீனிவாசன்,சங்கச் செயலாளர் அப்துல்லா, துளசி பாலசுப்பிரமணியன்,ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செந்தில்நாதன், செல்வகுமார், ராஜேஷ், லோகநாதன் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்தபோட்டியில் திருச்சி மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் இருந்து 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் 3-ம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், 4-ம் பரிசாக 5 ஆயிரமும், 5-ம் பரிசு ரூ.2 ஆயிரத்து ஐநூறு ,6-ம் பரிசாக ரூ. ஆயிரத்து ஐநூறு மற்றும் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×