என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு
- முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதா பமாக இறந்துள்ளார்
- பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
திருச்சி,
திருச்சியில் இருந்து விருதாச்சலம் செல்லும் ரெயில் பொன்மலை அருகே சென்ற போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த ரயிலில் அடிபட்டு பரிதா பமாக இறந்துள்ளார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பொன்மலை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்ம லை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






