என் மலர்
உள்ளூர் செய்திகள்

செடல் மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கோ பூஜை
- வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் செடல் மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கோ பூஜை
- அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
திருச்சி
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை ஒட்டி இன்று 8ம் ஆண்டாக திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கோ பூஜை நடந்தது.
உலக நன்மை வேண்டியும், சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் இந்த கோ பூஜைக்கு தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிறுவனர் வ.ச. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். இதில் ரிஷிகேஷ் சுவாமி முத்தாநந்த சரஸ்வதி பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்.
ஜெய் மாருதி ஆர். ரமேஷ், கமல் ராஜ், சித்தார்த்தன், விவேகானந்தர் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் சதீஷ் ,பொருளாளர் தனபால், இணைச் செயலாளர் நாகராஜ், ராம்க ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை தினேஷ் கண்ணன் தொகுத்து வழங்கினார்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






