என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 2 வாலிபர்கள்  தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருச்சியில் 2 வாலிபர்கள் தூக்கு போட்டு தற்கொலை

    • வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் 2 வாலிபர்கள் தூக்கு போட்டு தற்கொலை
    • இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சௌகத் அலி தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அந்தோணிராஜ் (வயது 27)இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.இந்த நிலையில் விட்டில் தனியாக இருந்த அந்தோணி ராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் ராஜேஷ் (வயது 22). கூலி வேலை செய்து வந்தார்.இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருமாம்.சம்பதவன்றுவயிற்று வலி அதிகமானத்தை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×