என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
- திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில்
- நவராத்திரி விழா தொடக்கம்
திருச்சி
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நவராத்திரி விழா இன்று 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று மாலை அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் 2ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
2, 3ம்நாட்களில் அம்மன் ஏகாந்த காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 4ம்நாளான 18-ந்தேதி ராஜஅலங்காரத்திலும், 19-ந்தேதி தாம்பூலம் தரித்தல் அலங்காரத்திலும், 20-ந்தேதி ஜெபம் வழிபாடு அலங்காரத்திலும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 22-ந்தேதி சிவலிங்கம் வழிபாடு அலங்காரத்திலும், 23-ந்தேதி மகிஷாசூரன் வதை அலங்காரத்திலும், 24-ந் தேதி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் அம்மன் எழுந்தருளி 4ம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இவ்விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்