search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா-நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா-நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழாவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்
    • இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி இன்று–டன் (3-ந்தேதி) நிறைவ–டைகிறது. தெப்பத் திருவிழாவை–யொட்டி தினமும் நம்பெரு–மாள் பல்வேறு வாக–னங்க–ளில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதை–யொட்டி மாலை 3 மணிய–ளவில் நம்பெருமாள் உபய– நாச்சியார்களுடன் மூலஸ்தா–னத்திலிருந்து திருச்சி விகையில் புறப்பட்டு மேல–வாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்ச–வம் கண்டருளுளினார். இரவு 9.15 மணிக்கு தெப் பக்குளத்தின் மைய மண்ட–பம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப் பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந் தார்.9-ம் திருநாளான இன்று (3-ந்தேதி) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதை–யொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தா–னத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டார்.

    வழிநடை உப–யங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேர்ந் தார்.பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத் திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக் காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறை–வடைகிறது.விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் இணை–ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×