என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்த பெண் சாவு
- மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்
- மகளை விடுவதற்காக வந்த போது சம்பவம்
திருச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பூதநல்லூர் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்.
இவரது மனைவி ப்ளோரா மேரி (வயது 40) இவரது மகள் அக்ஷயா( 21 ) இவர் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியா ற்றி வருகிறார். இந்த நிலை யில் ப்ளோரா மேரி மற்றும் குடும்பத்தினர் வேளாங்கண்ணி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மகளை திருச்சி யில் உள்ள மருத்துவமனை யில் விட்டு செல்வதற்காக ஃப்ளோரா மேரி வந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்ப ட்டது. உடனடியாக அந்த மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இன் னொரு தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மீண்டும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ப்ளோரா மேரி இறந்து விட்டதாக தெரிவி த்தனர். இது குறித்து அக்ஷயா கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






