search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த விமான நிலையமாக திருச்சி தேர்வு
    X

    சிறந்த விமான நிலையமாக திருச்சி தேர்வு

    • 2 மில்லியன் பயணிகளை கையாண்ட பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு
    • விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை கையாளும் குழுவின் சார்பில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்ப–டும். அந்த வகையில் 28 விமான நிலையங்களிலும் மேற்கண்ட குழுவின் சார் பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.இவ்வாறு மேற்கொள்ளப் படும் ஆய்வில் விமான நிலையத்தில் ஒவ்வொரு நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளின் பணிகள், பயணிக–ளுக்கான சேவையின் போது மன நிறைவு அளிக்கும் வகையில் உள்ளதா என ஆய்வு நடத்தப்படும்.பாதுகாப்பு, சுங்கத்துறை, குடியுரிமை பிரிவு, விமான நிறுவனங்களின் சேவை போன்ற பல்வேறு பிரிவுக–ளின் மூலம் மேற்கண்ட குழுவின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வாடிக் கையாகும்.

    அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத் தப்பட்ட சோதனையில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலைய பட்டியலில் திருச்சி விமான நிலையம் பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முதலி–டத்தை பிடிததுள்ளது.அத்துடன் பயணிகள் விரும்பும் வகையில் சேவை வழங்கி வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின் மூலம் அறிக்கை அளிக் கப்பட்டது. மேலும் வளர்ந்து வரும் விமான நிலையங்க–ளில் அதிக அளவில் பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையமாகவும் அதனை தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தோனே–சியாவில் உள்ள மற்றொரு விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி–னார்.

    Next Story
    ×