search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை செருப்பால் அடித்த கணவன்
    X

    மனைவியை செருப்பால் அடித்த கணவன்

    • முசிறி கோர்ட் வளாகத்தில் பரபரப்பு
    • மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சி முசிறி நெய்வேலையை சேர்ந்தவர் உஷாராணி(வயது 25). இவரின் கணவர் பாலசுப்பிரமணியன்(37). இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தொடரபாக உஷாராணி முசிறி கோர்ட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை அங்கு கண்ட பாலசுப்பிரமணியன் தகாத வார்த்தையால் திட்டி, செருப்பால் அடித்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×