search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜங்சன் மேம்பாலப் பணி 6 மாதத்தில் முடிவடையும்- எம்.பி.திருநாவுக்கரசர் நம்பிக்கை
    X

    ஜங்சன் மேம்பாலப் பணி 6 மாதத்தில் முடிவடையும்- எம்.பி.திருநாவுக்கரசர் நம்பிக்கை

    • ஜங்சன் மேம்பாலப் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
    • அண்ணாமலை கனவு காண யாரும் தடை போட முடியாது

    திருச்சி :

    திருச்சி மாநகரம் முதலியார் சத்திரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டியை திருச்சி மக்களவைத் தொகுததி உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.

    அப்போது செய்தியாள ர்களிடம் கூறியது: தடைபட்டுள்ள திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிலும் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுளளார். அவர் கனவு காண யாரும் தடை போட முடியாது. ஆனால் அது யதார்த்தத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

    ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தர்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி, மதம் இவற்றால் மக்களை பிளவுப்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது.

    வரம்பு மீறாமல் நாகரிகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும் என்றார்.

    Next Story
    ×