என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- தந்தை இறந்த தூக்கம் தாங்காமல்
திருச்சி:
திருச்சி அருகே உள்ள என்.சாத்தனூர் சீரா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள செப்பல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது தந்தை பொன்னை யன் திடீர் உடல் நலக்கு றைவால் இறந்துவிட்டார்.
தந்தை திடீரென இறந்த தால் ஹரிஹரசுதன் மனம் உடைந்தார். அவரின் பிரி வால் மிகுந்த மன அழுத்த த்திற்கு ஆளாகி கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாருடனும் சரிவர பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரசுதன் பூச்சிக்கொ ல்லி மருந்து எடுத்து குடி த்தார். பின்னர் மயங்கி விழுந்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை தாய் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் தீவிர சிகிச்சை அளி த்தனர். இருந்தபோதிலும் ஹரிஹரசுதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து சோமரச ம்பேட்டை போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






