search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது - திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது - திரளான பக்தர்கள் தரிசனம்

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • விழாவின் நிறைவுநாளான 9ம் நாள் (21-ந்தேதி) நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.

    அந்த வகையில் இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலு கால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    அதன் பின்னர் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளினார். இந்நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் (19-ந்தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்அளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

    அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு8.15 மணிமுதல் 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்குபுறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார். விழாவின் நிறைவுநாளான 9ம் நாள் (21-ந்தேதி) நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    Next Story
    ×